பெரிய_திருமொழி
பெரிய திருமொழி.681
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1628
பாசுரம்
கள்ளம்மனம் விள்ளும்வகை கருதிக்கழல் தொழுவீர்
வெள்ளம்முது பரவைத்திரை விரிய,கரை யெங்கும்
தெள்ளும்மணி திகழும்சிறு புலியூர்ச்சல சயனத்
துள்ளும்,என துள்ளத்துளு முறைவாரையுள் ளீரே (2) 7.9.1
பெரிய திருமொழி.682
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1629
பாசுரம்
தெருவில்திரி சிறுநோன்பியர் செஞ்சோற்றொடு கஞ்சி
மருவி,பிரிந் தவர்வாய்மொழி மதியாதுவந் தடைவீர்,
திருவில்பொலி மறையோர்ச்சிறு புலியூர்ச்சல சயனத்து,
உருவக்குற ளடிகளடி யுணர்மின்னுணர் வீரே 7.9.2
பெரிய திருமொழி.683
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1630
பாசுரம்
பறையும்வினை தொழுதுய்மின்நீர் பணியும்சிறு தொண்டீர்.
அறையும்புன லொருபால்வய லொருபால்பொழி லொருபால்
சிறைவண்டின மறையும்சிறு புலியூர்ச்சல சயனத்
துறையும்,இறை யடியல்லதொன் றிறையும்மறி யேனே 7.9.3
பெரிய திருமொழி.684
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1631
பாசுரம்
வானார்மதி பொதியும்சடை மழுவாளியொ டொருபால்,
தானாகிய தலைவன்னவன் அமரர்க்கதி பதியாம்
தேனார்பொழில் தழுவும்சிறு புலியூர்ச்சல சயனத்
தானாயனது, அடியல்லதொன் றறியேனடி யேனே 7.9.4
பெரிய திருமொழி.685
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1632
பாசுரம்
நந்தாநெடு நரகத்திடை நணுகாவகை, நாளும்
எந்தாயென இமையோர்தொழு தேத்தும்மிடம், எறிநீர்ச்
செந்தாமரை மலரும்சிறு புலியூர்ச்சல சயனத்து
அந்தாமரை யடியாய்.உன தடியேற்கருள் புரியே 7.9.5
பெரிய திருமொழி.686
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1633
பாசுரம்
முழுநீலமும் அலராம்பலும் அரவிந்தமும் விரவி,
கழுநீரொடு மடவாரவர் கண்வாய்முகம் மலரும்,
செழுநீர்வயல் தழுவும்சிறு புலியூர்ச்சல சயனம்,
தொழுநீர்மைய துடையாரடி தொழுவார்துய ரிலரே 7.9.6
பெரிய திருமொழி.687
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1634
பாசுரம்
சேயோங்குதண் திருமாலிருஞ் சோலைமலை யுை றயும்
மாயா,எனக் குரையாயிது மறைநான்கினு ளாயோ,
தீயோம்புகை மறையோர்ச்சிறு புலியூர்ச்சல சயனத்
தாயோ,உன தடியார்மனத் தாயோவறி யேனே (2) 7.9.7
பெரிய திருமொழி.688
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1635
பாசுரம்
மையார்வரி நீலம்மலர்க் கண்ணார்மனம் விட்டிட்டு,
உய்வானுன கழலேதொழு தெழுவேன்,கிளி மடவார்
செவ்வாய்மொழி பயிலும்சிறு புலியூர்ச்சல சயனத்து,
ஐவாய் அர வணைமேலுறை அமலா.அரு ளாயே 7.9.8
பெரிய திருமொழி.689
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1636
பாசுரம்
கருமாமுகி லுருவா.கன லுருவா.புன லுருவா,
பெருமால்வரை யுருவா.பிற வுருவா.நின துருவா,
திருமாமகள் மருவும்சிறு புலியூர்ச்சல சயனத்து,
அருமாகட லமுதே.உன தடியேசர ணாமே. (2) 7.9.9
பெரிய திருமொழி.690
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1637
பாசுரம்
சீரார்நெடு மறுகில்சிறு புலியூர்ச்சல சயனத்து,
ஏரார்முகில் வண்ணன்றனை யிமையோர்பெரு மானை,
காரார்வயல் மங்கைக்கிறை கலியன்னொலி மாலை,
பாராரிவை பரவித்தொழப் பாவம்பயி லாவே (2) 7.9.10