பெரிய_திருமடல்
பெரிய திருமடல்.81
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2753
பாசுரம்
இன்னிலா விங்கதிரும் என்றனக்கே வெய்தாகும்.
தன்னுடைய தன்மை தவிரத்தான் எங்கொலோ, -
தென்னன் பொதியில் செழுஞ்சந்தின் தாதளைந்து,
மன்னிவ் வுலகை மனங்களிப்ப வந்தியங்கும், 41
பெரிய திருமடல்.82
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2754
பாசுரம்
இன்னிளம்பூந் தென்றலும் வீசும் எரியெனக்கே,
முன்னிய பெண்ணைமேல் முள்முளரிக் கூட்டகத்து,
பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலும்,
என்னுடைய நெஞ்சுக்கோ ரீர்வாளாம் எஞ்செய்கேன் 42
பெரிய திருமடல்.83
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2755
பாசுரம்
கன்னவில்தோள் காமன் கருப்புச் சிலைவளைய,
கொன்னவிலும் பூங்கணைகள் கோத்தௌப் பொதவணைந்து,
தன்னுடைய தோள்கழிய வாங்கி, - தமியேன்மேல்
என்னுடைய நெசே இலக்காக எய்கின்றான், 43
பெரிய திருமடல்.84
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2756
பாசுரம்
பின்னிதனைக் காப்பீர்தாம் இல்லையே, - பேதையேன்
கன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடிமலரின்,
நன்னறு வசமற் றாரானும் எய்தாமே,
மன்னும் வறுநிலத்து வாளாங் குகுத்ததுபோல், 44
பெரிய திருமடல்.85
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2757
பாசுரம்
என்னுடைய பெண்மையும் என்நலனும் என்முலையும்,
மன்னு மலர்மங்கை மைந்தன், கணபுரத்துப்
பொன்மலைபோல் நின்றவன்றன் பொன்னகலம் தோயாவேல்
என்னிவைதான்? வாளா எனக்கே பொறையாகி, 45
பெரிய திருமடல்.86
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2758
பாசுரம்
முன்னிருந்து மூக்கின்று,மூவாமைக் காப்பதோர்
மன்னும் மருந்தறிவி ரில்லையே? - மல்விடையின்
துன்னு பிடரெருத்துத் தூக்குண்டு, வன்தொடரால்
கன்னியர் கண்மிளிரக் கட்டுண்டு, மாலைவாய் 46
பெரிய திருமடல்.87
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2759
பாசுரம்
தன்னுடைய நாவொழியா தாடும் தனிமணியின்,
இன்னிசை ஓசையும் வந்தென் செவிதனக்கே,
கொன்னவிலு மெஃகில் கொடிதாய் நொடிதாகும்,
என்னிதனைக் காக்குமா சொல்லீர்?, இதுவிளைத்த 47
பெரிய திருமடல்.88
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2760
பாசுரம்
மன்னன் நறுந்துழாய் வாழ்மார்வன் - மாமதிகோள்
முன்னம் விடுத்த முகில்வண்ணன் - காயாவின்
சின்ன நறும்பூந் திகழ்வண்ணன் - வண்ணம்போல்
அன்ன கடலை மலையிட் டணைகட்டி, 48
பெரிய திருமடல்.89
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2761
பாசுரம்
மன்னன் இராவணனை மாமண்டு வெஞ்சமத்து,
பொன்முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து
தென்னுலகம் ஏற்றுவித்த சேவகனை, - ஆயிரங்கண்
மன்னவன் வானமும் வானவர்த்தம் பொன்னும்லகும், 49
பெரிய திருமடல்.90
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2762
பாசுரம்
தன்னுடைய தோள்வலியால் கைக்கொண்ட தானவை
பின்னோர் அரியுருவ மகி எரிவிழித்து,
கொன்னவிலும் வெஞ்சமதுக் கொல்லாதே, - வல்லாளன்
மன்னும் மணிக்குஞ்சி பற்றி வரவீர்த்து, 50