பெரிய_திருமடல்
பெரிய திருமடல்.51
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2723
பாசுரம்
மன்னிய சிங்கா சனத்தின்மேல், - வாணொடுங்கண்
கன்னியரா லிட்ட கவரிப் பொதியவிழ்ந்து,ஆங்
கின்னளம்பூந் தென்றல் இயங்க, - மருங்கிருந்த
மின்னனைய _ண்மருங்குல் மெல்லியலார் வெண்முறுவல், 11
பெரிய திருமடல்.52
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2724
பாசுரம்
முன்னம் முகிழ்த்த முகிழ்நிலா வந்தரும்ப,
அன்னவர்த்தம் மானோக்க முண்டாங் கணிமலர்சேர்,
பொன்னியல் கற்பகத்தின் காடுடுத்த மாடெல்லாம்,
மன்னிய மந்தாரம் பூத்த மதுத்திவலை, 12
பெரிய திருமடல்.53
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2725
பாசுரம்
இன்னைசை வண்டமரும் சோலைவாய் மாலைசேர்,
மன்னிய மாமயில்போல் கூந்தல், - மழைத்தடங்கண்
மின்னிடையா ரோடும் விளையாடி-வேண்டிடத்து,
மன்னும் மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின், 13
பெரிய திருமடல்.54
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2726
பாசுரம்
மின்னின் ஒளிசேர் பளிங்கு விளிம்படுத்த,
மன்னும் பவளக்கால் செம்பொஞ்செய் மண்டபத்துள்,
அன்ன நடைய அரம்பயர்த்தம் வகைவளர்த்த
இன்னிசையாழ் பாடல்கேட் டின்புற்று, - இருவிசும்பில் 14
பெரிய திருமடல்.55
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2727
பாசுரம்
மன்னும் மழைதழும் வாணிலா நீண்மதிதோய்,
மின்னி னொளிசேர் விசும்பூரும் மாளிகைமேல்,
மன்னும் மளிவிளக்கை மாட்டி, - மழைக்கண்ணார்
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல், 15
பெரிய திருமடல்.56
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2728
பாசுரம்
துன்னிய சாலேகம் சூழ்கதவம் தாள்திறப்ப,
அன்னம் உழக்க நெறிந்துக்க வாள்நீலச்,
சின்ன நறுந்தாது சூடி, - ஓர் மந்தாரம்
துன்னும் நறுமலரால் தோள்கொட்டி, கற்பகத்தின் 16
பெரிய திருமடல்.57
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2729
பாசுரம்
மன்னும் மலர்வாய் மணிவண்டு பின்தொடர
இன்னிளம்பூந் தென்றல் புகுந்து,ஈங்க் கிளைமுலைமேல்
நன்னருஞ் சந்தனச் சேறுலர்த்த, - தாங்கருஞ்சீர்
மின்னிடைமேல் கைவைத் திருந்தேந் திளைமுலைமேல், 17
பெரிய திருமடல்.58
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2730
பாசுரம்
பொன்னரும் பாரம் புலம்ப, - அகங்குழைந்தாங்
கின்ன வுருவின் இமையாத் தடங்கண்ணார்,
அன்னவர்த்தம் மானோக்கம் உண்டாங் கணிமுறுவல்,
இன்னமுதம் மாந்தி யிருப்பர், - இதுவன்றே 18
பெரிய திருமடல்.59
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2731
பாசுரம்
அன்ன அறத்தின் பயனாவது?, ஒண்பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால், - காமத்தின்
மன்னும் வழிமுறையே நிற்றும்நாம் மானோக்கின்
அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல், 19
பெரிய திருமடல்.60
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2732
பாசுரம்
மன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும்,
தென்னுறையில் கேட்டறிவ துண்டு, - அதனை யாம்தெளியோம்,
மன்னும் வடநெறியே வேண்டினோம்-வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ்சந் தனக்குழம்பின், 20