Responsive image

திருவாய்மொழி

திருவாய்மொழி.101

பாசுர எண்: 2891

பாசுரம்
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால்தொழில்,
எண்ணிலும்வரு மென்னினிவேண்டுவம்,
மண்ணும்நீரு மெரியும்நல்வாயுவும்,
விண்ணுமாய்விரியு மெம்பிரானையே. 1.10.2

Summary

My Lord unfolds himself as Earth, water, fire wind and sky. Whenever worship him with love, he enters into my eyes and fills my heart. What more do I want?

திருவாய்மொழி.102

பாசுர எண்: 2892

பாசுரம்
எம்பிரானையெந்தை தந்தைதந்தைக்கும்
தம்பிரானை, தண்தாமரைக்கண்ணனை,
கொம்பராவு நுண்ணேரிடைமார்வனை,
எம்பிரானைத் தொழாய்மடநெஞ்சமே. 1.10.3

Summary

O Heart, wroship the cool lotus-eyed Lord! On his chest he bears the lotus-dame Lakshmi whose hips are slender like a snake or a twig.  He is the Lord of my father, his father and the forefathers before him.

திருவாய்மொழி.103

பாசுர எண்: 2893

பாசுரம்
நெஞ்சமேநல்லை நல்லை,உன்னைப்பெற்றால்
என்செய்யோம், இனியென்னகுறைவினம்?
மைந்தனை மலராள்மணவாளனை,
துஞ்சும்போதும் விடாதுதொடர்க்கண்டாய். 1.10.4

திருவாய்மொழி.104

பாசுர எண்: 2894

பாசுரம்
கண்டாயேநெஞ்சே கருமங்கள்வாய்க்கின்று, ஓர்
எண்டானுமின்றியே வந்தியலுமாறு,
உண்டானையுலகேழு மோர்மூவடி
கொண்டானை, கண்டு கொண்டனைநீயுமே. 1.10.5

திருவாய்மொழி.105

பாசுர எண்: 2895

பாசுரம்
நீயும்நானுமிந் நேர்நிற்கில், மேல்மற்றோர்,
நோயும்சார்க்கொடான் நெஞ்சமே, சொன்னேன்,
தாயும்தந்தையுமா யிவ்வுலகினில்,
வாயுமீசன் மணிவண்ணனெந்தையே. 1.10.6

திருவாய்மொழி.106

பாசுர எண்: 2896

பாசுரம்
எந்தையேயென்று மெம்பெருமானென்றும்,
சிந்தையுள்வைப்பன் சொல்லுவன்பாவியேன்,
எந்தையெம்பெருமானென்று வானவர்,
சிந்தையுள் வைத்துச் சொல்லும்செல்வனையே. 1.10.7

திருவாய்மொழி.107

பாசுர எண்: 2897

பாசுரம்
செல்வநாரண னென்றசொல்கேட்டலும்,
மல்கும்கண்பனி நாடுவன்மாயமே,
அல்லும்நன்பகலு மிடைவீடின்றி,
நல்கியென்னை விடான்நம்பி நம்பியே. 1.10.8

திருவாய்மொழி.108

பாசுர எண்: 2898

பாசுரம்
நம்பியைத்தென் குறுங்குடிநின்ற, அச்
செம்பொனேதிக ழும்திருமூர்த்தியை,
உம்பர்வானவ ராதியஞ்சோதியை,
எம்பிரானையென் சொல்லிமறப்பனோ. 1.10.9

திருவாய்மொழி.109

பாசுர எண்: 2899

பாசுரம்
மறப்பும்ஞானமும் நானொன் றுணர்ந்திலன்,
மறக்குமென்றுசெந் தாமரைக்கண்ணொடு,
மறப்பற என்னுள்ளே மன்னினான் றன்னை,
மறப்பனோவினி யானென்மணியையே? 1.10.10

திருவாய்மொழி.110

பாசுர எண்: 2900

பாசுரம்
மணியைவானவர் கண்ணனைத்தன்னதோர்
அணியை, தென்குரு கூர்ச்சடகோபன், சொல்
பணிசெயாயிரத் துள்ளிவைபத்துடன்,
தணிவிலர் கற்ப ரேல்கல்விவாயுமே. 1.10.11

Summary

He cleanses the heart, makes it blossom and grow, he is beyond the ken of thought, feeling and senses, He is pure consciousness, all goodness, and eternal. He has no peer or superior, he is all our souls.

Enter a number between 1 and 4000.