திருமங்கை_ஆழ்வார்
திருநெடுந்தாண்டகம்.27
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
திருநெடுந்தாண்டகம்
பாசுர எண்: 2078
பாசுரம்
செங்கால மடநாராய். இன்றே சென்று
திருக்கண்ண புரம்புக்கென் செங்கண் மாலுக்கு,
எங்காத லென்துணைவர்க் குரைத்தி யாகில்
இதுவொப்ப தெமக்கின்ப மில்லை, நாளும்
பைங்கானம் ஈதெல்லாம் உனதே யாகப்
பழனமீன் கவர்ந்துண்ணத் தருவன், தந்தால்
இங்கேவந் தினிதிருந்துன் பெடையும் நீயும்
இருநிலத்தி லினிதின்ப மெய்த லாமே. (2) 27
Summary
O Lovely red-footed Stark! Go now to my lotus-eyed Lord and companion of Tirukkannapuram and tell him of my love. If you do, all these rich pastures will be yours forever, and I shall let you catch all the fish you want. Yo and your mate can come and live here in sweet pleasure for nothing can give me greater satisfaction.
திருநெடுந்தாண்டகம்.28
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
திருநெடுந்தாண்டகம்
பாசுர எண்: 2079
பாசுரம்
தென்னிலங்கை யரண்சிதறி அவுணன் மாளச்
சென்றுலக மூன்றினையும் திரிந்தோர் தேரால்,
மன்னிலங்கு பாரதத்தை மாள வூர்ந்த
வரையுருவின் மாகளிற்றைத் தோழீ, என்றன்
பொன்னிலங்கு முலைக்குவட்டில் பூட்டிக் கொண்டு
போகாமை வல்லேனாய்ப் புலவி யெய்தி,
என்னிலங்க மெல்லாம்வந் தின்ப மெய்த
எப்பொழுதும் நினைந்துருகி யிருப்பன் நானே. 28
Summary
My Lord who destroyed the fortress of Lanka and killed the demon king. Lord who strode the three worlds, Lord who steered the royal chariot and waged the Bharata war. Is like a dark mountain, a huge elephant, O Cousin, I shall wait for him forever, thinking fondly of the day when I can lock him in the embrace of my paled breasts, and let my sore limbs rejoice.
திருநெடுந்தாண்டகம்.29
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
திருநெடுந்தாண்டகம்
பாசுர எண்: 2080
பாசுரம்
அன்றாயர் குலமகளுக் கரையன் றன்னை
அலைகடலைக் கடைந்தடைத்த அம்மான் றன்னை,
குன்றாத வலியரக்கர் கோனை மாளக்
கொடுஞ்சிலைவாய்ச் சரந்துரந்து குலங்க ளைந்து
வென்றானை, குன்றெடுத்த தோளி னானை
விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானை, தண்குடந்தைக் கிடந்த மாலை
நெடியானை அடிநாயேன் நினைந்திட் டேனே. (2) 29
Summary
The Lord of the cowherd-dame Nappinnai, who once churned, then bridged the ocean is my Lord. He killed the demon king and all his kin with arrows shot from his mighty bow. victoriously He lifted the mountain Govardhana. He resides forever in fresh water-fed Tiruvinnakaram. He is the Lord of cool Tirukkudandal. He is the eternal one. I this lowly cur-self, shall forever think of him alone.
திருநெடுந்தாண்டகம்.30
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
திருநெடுந்தாண்டகம்
பாசுர எண்: 2081
பாசுரம்
மின்னுமா மழைதவழும் மேக வண்ணா.
விண்ணவர்தம் பெருமானே. அருளாய், என்று,
அன்னமாய் முனிவரோ டமர ரேத்த
அருமறையை வெளிப்படுத்த அம்மான் றன்னை,
மன்னுமா மணிமாட வேந்தன்
மானவேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய_ல் தமிழ்மாலை வல்லார் தொல்லைப்
பழவினையை முதலரிய வல்லார் தாமே. (2) 30
Summary
This literary garland of Tamil songs by Kaliyan, spear wielding Parakalan, Chief of Tirumangal surrounded by large sparkling mansions, is dedicated to the Lord who came as a sage and expounded the Vedas, the Lord of cloud dark hue worshipped by sages and seers seeking his refuge. Those who are adept in it will cut as under their rage-old karmas.
திருவெழுக்கூற்றிருக்கை.1
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
திருவெழுக்கூற்றிருக்கை
பாசுர எண்: 2672
பாசுரம்
ஒருபே ருந்தி யிருமலர்த் தவிசில்,
ஒருமுறை அயனை யீன்றனை, ஒருமுறை
இருசுடர் மீதினி லியங்கா, மும்மதிள்
இலங்கை யிருகால் வளைய, ஒருசிலை
ஒன்றிய ஈரெயிற் றழல்வாய் வாளியில்
அட்டனை, மூவடி நானிலம் வேண்டி,
முப்புரி _லொடு மானுரி யிலங்கும்.
மார்வினில், இருபிறப் பொருமா ணாகி,
ஒருமுறை யீரடி,மூவுல களந்தானை,
Summary
On one big lotus navel, sitting with both legs crossed was born the one Brahma; then once, when the two orbs feared to pass above three-walled Lanka, you bent the two ends of one mighty bow and shot one arrow, with two curved teeth spitting hell-fire; asking for three strides of four-lands, you came wearing the three-twist thread of the twice born ones, at once with two steps, you measured the three worlds; the four Quarters trembled when you rods the five-feathered garuda, to save the four-legged three-ichored two-eared unique elephant Gajendra.
பெரிய திருமடல்.1
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2673
பாசுரம்
மன்னிய பல்பொறிசேர் ஆயிரவாய் வாளரவின்,
சென்னி மணிக்குடுமித் தெய்வச் சுடர்நடுவுள்,
மன்னிய நாகத் தணைமேலோர் மாமலைபோல்,
மின்னும் மணிமகர குண்டலங்கள் வில்வீச, 1
பெரிய திருமடல்.2
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2674
பாசுரம்
துன்னிய தாரகையின் பேரொளிசேர் ஆகாசம்,
என்னும் விதானத்தைன் கீழால், - இருசுடரை
மின்னும் விளக்காக ஏற்றி, மறிகடலும்
பன்னு திரைக்கவரி வீச, - நிலமங்கை 2
பெரிய திருமடல்.3
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2675
பாசுரம்
அறியும் தன்மையை, முக்கண் நாற்றோள்
ஐவாய் அரவோடு ஆறுபொதி சடையோன்
அறிவருந் தன்மைப் பெருமையுள் நின்றனை,
பெரிய திருமடல்.4
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2676
பாசுரம்
ஏழுல கெயிற்றினில் கொண்டனை, கூறிய
அறுசுவைப் பயனும் ஆயினை, சுடர்விடும்
ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை, சுந்தர
நாற்றோள் முந்நீர் வண்ண,நின் ஈரடி
ஒன்றிய மனத்தால், ஒருமதி முகத்து
மங்கையர் இருவரும் மலரன, அங்கையில்
முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை,
பெரிய திருமடல்.5
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2677
பாசுரம்
நெறிமுறை நால்வகை வருணமும் ஆயினை,
மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே,
அறுபதம் முரலும் கூந்தல் காரணம்
ஏழ்விடை யடங்கச் செற்றனை, அறுவகைச்
சமயமும் அறிவரு நிலையினை, ஐம்பால்
ஓதியை ஆகத் திருத்தினை, அறமுதல்
நான்க வையாய் மூர்த்தி மூன்றாய்
இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து