பெரிய திருமொழி.734
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1681
பாசுரம்
நீர்மலி கின்றதோர் மீனாயோ ராமையுமாய்,
சீர்மலி கின்றதோர் சிங்க வுருவாகி,
கார்மலி வண்ணன் கண்ணபுரத் தெம்பெருமான்,
தார்மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 8.4.4
பெரிய திருமொழி.735
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1682
பாசுரம்
ஏரார் மலரெல்லா மூதிநீ யென்பெறுதி,
பாரா ருலகம் பரவப் பெருங்கடலுள்,
காராமை யான கண்ணபுரத் தெம்பெருமான்,
தாரார் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 8.4.5
பெரிய திருமொழி.736
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1683
பாசுரம்
மார்வில் திருவன் வலனேந்து சக்கரத்தன்,
பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி,
காரில் திகழ்காயா வண்ணன் கதிர்முடிமேல்,
தாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 8.4.6
பெரிய திருமொழி.737
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1684
பாசுரம்
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன்
தார்மன்னு தாச ரதியாய தடமார்வன்,
காமன்றன் தாதை கண்ணபுரத் தெம்பெருமான்,
தாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 8.4.7
பெரிய திருமொழி.738
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1685
பாசுரம்
நீல மலர்கள் நெடுநீர் வயல்மருங்கில்,
சால மலரெல்லா மூதாதே, வாளரக்கர்
காலன் கண்ணபுரத் தெம்பெருமான் கதிர்முடிமேல்,
கோல நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ. 8.4.8
பெரிய திருமொழி.739
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1686
பாசுரம்
நந்தன் மதலை நிலமங்கை நல்துணைவன்,
அந்த முதல்வன் அமரர்கள் தம்பெருமான்,
கந்தம் கமழ்காயா வண்ணன் கதிர்முடிமேல்,
கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ. 8.4.9
பெரிய திருமொழி.740
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1687
பாசுரம்
வண்டமருஞ் சோலை வயலாலி நன்னாடன்,
கண்டசீர் வென்றிக் கலிய னொலிமாலை,
கொண்டல் நிறவண்ணன் கண்ண புரத்தானை,
தொண்டரோம் பாட நினைந்தூதாய் கோல்தும்பீ. (2) 8.4.10
பெரிய திருமொழி.741
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1688
பாசுரம்
தந்தை காலில் விலங்கறவந்து
தோன்றிய தோன்றல்பின், தமியேன்றன்
சிந்தை போயிற்றுத் திருவருள்
அவனிடைப் பெறுமள விருந்தேனை,
அந்தி காவலனமுதுறு
பசுங்கதி ரவைசுட அதனோடும்,
மந்த மாருதம் வனமுலை
தடவந்து வலிசெய்வ தொழியாதே. (2) 8.5.1
பெரிய திருமொழி.742
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1689
பாசுரம்
மாரி மாக்கடல் வளைவணற்
கிளையவன் வரைபுரை திருமார்பில்,
தாரி னாசையில் போயின
நெஞ்சமும் தாழ்ந்ததோர் துணைகாணேன்,
ஊரும் துஞ்சிற்றுலகமும்
துயின்றது ஒளியவன் விசும்பியங்கும்,
தேரும் போயிற்றுத் திசைகளும்
மறைந்தன செய்வதொன் றறியேனே. 8.5.2
பெரிய திருமொழி.743
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1690
பாசுரம்
ஆயன் மாயமே யன்றிமற்
றென்கையில் வளைகளும் இறைநில்லா,
பேயின் ஆருயி ருண்டிடும்
பிள்ளைநம் பெண்ணுயிர்க் கிரங்குமோ,
தூய மாமதிக் கதிர்ச்சுடத்
துணையில்லை இணைமுலை வேகின்றதால்,
ஆயன் வேயினுக் கழிகின்ற
துள்ளமும் அஞ்சேலென் பாரிலையே. 8.5.3