பெரிய திருமொழி.604
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1551
பாசுரம்
புள்வாய் பிளந்த புனிதா என் றழைக்க,
உள்ளேநின் றென்னுள்ளங் குளிரு மொருவா,
கள்வா கடன்மல்லைக் கிடந்த கரும்பே,
வள்ளால் உன்னை யெங்ஙனம்நான் மறக்கேனே 7.1.4
பெரிய திருமொழி.605
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1552
பாசுரம்
வில்லேர் நுதல்வேல் நெடுங்கண் ணியும்நீயும்,
கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே,
நல்லாய் நரநா ரணனே எங்கள்நம்பி,
சொல்லா யுன்னையான் வணங்கித் தொழுமாறே 7.1.5
பெரிய திருமொழி.606
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1553
பாசுரம்
பணியேய் பரங்குன்றின் பவளத் திரளே,
முனியே திருமூழிக் களத்து விளக்கே,
இனியாய் தொண்டரோம் பருகின் னமுதாய
கனியே உன்னைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே 7.1.6
பெரிய திருமொழி.607
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1554
பாசுரம்
கதியே லில்லைநின் னருளல் லதெனக்கு,
நிதியே. திருநீர் மலைநித் திலத்தொத்தே,
பதியே பரவித் தொழும்தொண் டர்தமக்குக்
கதியே உனைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே 7.1.7
பெரிய திருமொழி.608
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1555
பாசுரம்
அத்தா அரியே என்றுன் னையழைக்க,
பித்தா வென்று பேசுகின்றார் பிறரென்னை,
முத்தே மணிமா ணிக்கமே முளைக்கின்ற
வித்தே உன்னைஎங் ஙனம்னான் விடுகேனே. 7.1.8
பெரிய திருமொழி.609
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1556
பாசுரம்
தூயாய். சுடர்மா மதிபோ லுயிர்க்கெல்லாம்,
தாயாய் அளிக்கின்ற தண்டா மரைக்கண்ணா,
ஆயா அலைநீ ருலகேழும் முன்னுண்ட
வாயா உனையெங் ஙனம்நான் மறக்கேனே 7.1.9
பெரிய திருமொழி.610
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1557
பாசுரம்
வண்டார் பொழில்சூழ் நறையூர்நம் பிக்கு,என்றும்
தொண்டாய்க் கலிய நொலிசெய் தமிழ்மாலை,
தொண்டீர் இவைபாடு மின்பாடி நின்றாட,
உண்டே விசும்பு உந்தமக்கில் லைதுயரே (2) 7.1.10
பெரிய திருமொழி.611
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1558
பாசுரம்
புள்ளாய் ஏனமுமாய்ப்புகுந்து, என்னை யுள்ளங்கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள்நீர் சோர்தருமால்,
உள்ளே நின்றுருகி நெஞ்சமுன்னை யுள்ளியக்கால்,
நள்ளே னுன்னையல்லால் நறையூர்நின்ற நம்பீயோ. (2) 7.2.1
பெரிய திருமொழி.612
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1559
பாசுரம்
ஓடாவாளரியி ன் உருவாய் மருவி என்றன்
மாடே வந்தடியேன் மனங்கொள்ள வல்லமைந்தா,
பாடேன் தொண்டர்தம்மைக் கவிதைப் பனுவல் கொண்டு,
நாடே னுன்னையல்லால் நறையூர்நின்ற நம்பீயோ. 7.2.2
பெரிய திருமொழி.613
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1560
பாசுரம்
எம்மானு மெம்மனையும் எனைப்பெற் றொழிந்ததற்பின்,
அம்மானு மம்மனையும் அடியேனுக் காகிநின்ற,
நன்மான வொண்சுடரே நறையூர்நின்ற நம்பீ உன்
மைம்மான வண்ணமல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே 7.2.3