பெரிய திருமொழி.594
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1541
பாசுரம்
கல்லார் மதிள்சூழ் கச்சி நகருள்
நச்சிப் பாடகத்துள்,
எல்லா வுலகும் வணங்க விருந்த
அம்மான், இலங்கைக்கோன்
வல்லா ளாகம் வில்லால் முனிந்த
எந்தை, விபீடணற்கு
நல்லா னுடைய நாமம் சொல்லில்
நமோநா ராயணமே (6.10.4)
பெரிய திருமொழி.595
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1542
பாசுரம்
குடையா வரையால் நிரைமுன் காத்த
பெருமான் மருவாத
விடைதா னேழும் வென்றான் கோவல்
நின்றான் தென்னிலங்கை
அடையா அரக்கர் வீயப் பொருது
ே மவி வெங்கூற்றம்
நடையா வுண்ணக் கண்டான் நாமம்
நமோநா ராயணமே (6.10.5)
பெரிய திருமொழி.596
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1543
பாசுரம்
கான எண்கும் குரங்கும் முசுவும்
படையா அடலரக்கர்
மான மழித்து நின்ற வென்றி
அம்மான் எனக்கென்றும்
தேனும் பாலும் அமுது மாய
திருமால் திருநாமம்
நானும் சொன்னேன் நமரு முரைமின்
நமோநா ராயணமே (6.10.6)
பெரிய திருமொழி.597
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1544
பாசுரம்
நின்ற வரையும் கிடந்த கடலும்
திசையு மிருநிலனும்
ஒன்று மொழியா வண்ண மெண்ணி
நின்ற அம்மானார்
குன்று குடையா வெடுத்த அடிக
ளுடைய திருநாமம்
நன்று காண்மின் தொண்டீர் சொன்னேன்
நமோநா ராயணமே (6.10.7)
பெரிய திருமொழி.598
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1545
பாசுரம்
கடுங்கால் மாரி கல்லே பொழிய
அல்லே யெமக்கென்று
படுங்கால் நீயே சரணென் றாயர்
அஞ்ச அஞ்சாமுன்
நெடுங்கால் குன்றம் குடையொன் றேந்தி
நிரையைச் சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம்
நமோநா ராயணமே (6.10.8)
பெரிய திருமொழி.599
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1546
பாசுரம்
பொங்கு புணரிக் கடல்சூ ழாடை
நிலமா மகள்மலர்மா
மங்கை பிரமன் சிவனிந் திரன்வா
னவர்நா யகராய்
எங்க ளடிக ளிமையோர் தலைவ
ருடைய திருநாமம்
நங்கள் வினைகள் தவிர வுரைமின்
நமோநா ராயணமே (6.10.9)
பெரிய திருமொழி.600
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1547
பாசுரம்
வாவித் தடஞ்சூழ் மணிமுத் தாற்று
நறையூர் நெடுமாலை
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு
நம்பி நாமத்தை
காவித் தடங்கண் மடவார் கேள்வன்
கலிய னொலிமாலை
மேவிச் சொல்ல வல்லார் பாவம்
நில்லா வீயுமே (6.10.10)
பெரிய திருமொழி.601
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1548
பாசுரம்
கறவா மடநாகுதன் கன்றுள்ளி னாற்போல்,
மறவா தடியே னுன்னையே யழைக்கின்றேன்,
நறவார் பொழில்சூழ் நறையூர் நின்ற நம்பி,
பிறவாமை யெனைப்பணி யெந்தை பிரானே. (2) 7.1.1
பெரிய திருமொழி.602
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1549
பாசுரம்
வற்றா முதுநீரொடு மால்வரை யேழும்,
துற்றா முன்துற்றிய தொல்புக ழோனே,
அற்றே னடியே னுன்னையே யழைக்கின்றேன்,
பெற்றே னருள்தந்திடு என் எந்தை பிரானே. 7.1.2
பெரிய திருமொழி.603
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1550
பாசுரம்
தாரேன் பிறர்க்குன் னருளென் னிடைவைத்தாய்,
ஆரே னதுவே பருகிக் களிக்கின்றேன்,
காரேய் கடலே மலையே திருக்கோட்டி
யூரே, உகந்தா யையுகந் தடியேனே 7.1.3