Responsive image

பெரிய திருமொழி.554

பாசுர எண்: 1501

பாசுரம்
பைங்கணா ளரியுருவாய் வெருவ நோக்கிப்
பருவரைத்தோ ளிரணியனைப் பற்றிவாங்கி
அங்கைவா ளுகிர் நுதியா லவன தாகம்
அங்குருதி பொங்குவித்தா னடிக்கீழ்நிற்பீர்
வெங்கண்மா களிறுந்தி வெண்ணியேற்ற
விறல்மன்னர் திறலழிய வெம்மாவுய்த்த
செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.4)

பெரிய திருமொழி.555

பாசுர எண்: 1502

பாசுரம்
அன்றுலக மூன்றினையு மளந்து வேறோர்
அரியுருவா யிரணியன தாகங்கீண்டு
வென்றவனை விண்ணுலகில் செலவுய்த் தாற்கு
விருந்தாவீர் மேலெழுந்து விலங்கல் பாய்ந்து
பொன்சிதறி மணிகொணர்ந்து கரைமேல் சிந்திப்
புல ம்பரந்து நிலம்பரக்கும் பொன்னிநாடன்
தென்தமிழன் வடபுலக்கோன் சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.5)

பெரிய திருமொழி.556

பாசுர எண்: 1503

பாசுரம்
தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த்
தயங்கொளிசேர் மூவுலகும் தானாய்வானாய்,
தன்னாலே தானுருவில் மூர்த்தி மூன்றாய்த்
தானாய னாயினான் சரணென்றுய்வீர்
மின்னாடு வேலேந்து விளைந்த வேளை
விண்ணேறத் தனிவேலுய்த் துலகமாண்ட
தென்னாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.6)

பெரிய திருமொழி.557

பாசுர எண்: 1504

பாசுரம்
முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி
முதுதுவரைக் குலபதியாக் காலிப்பின்னே
இலைத்தடத்த குழலூதி யாயர் மாதர்
இனவளைகொண் டானடிக்கீ ழெய்தகிற்பீர்
மலைத்தடத்த மணிகொணர்ந்து வைய முய்ய
வளங்கொடுக்கும் வருபுனலம் பொன்னிநாடன்
சிலைத்தடக்கைக் குலச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.7)

பெரிய திருமொழி.558

பாசுர எண்: 1505

பாசுரம்
முருக்கிலங்கு கனித்துவர்வாய்ப் பின்னை கேள்வன்
மன்னெல்லாம் முன்னவியச் சென்று,வென்றிச்
செருக்களத்துத் திறலழியச் செற்ற வேந்தன்
சிரந்துணிந்தான் திருவடி_ம் சென்னிவைப்பீர்
இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ளீசற்கு
எழில்மாட மெழுபதுசெய் துலகமாண்ட
திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.8)

பெரிய திருமொழி.559

பாசுர எண்: 1506

பாசுரம்
தாராளன் தண்ணரங்க வாளன் பூமேல்
தனியாளன் முனியாள ரேத்தநின்ற
பேராளன் ஆயிரம்பே ருடைய வாளன்
பின்னைக்கு மணவாளன் பெருமைகேட்பீர்,
பாராள ரவரிவரென் றழுந்தை யேற்ற
படைமன்ன ருடல்துணியப் பரிமா வுய்த்த
தேராளன் கோச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.9)

பெரிய திருமொழி.560

பாசுர எண்: 1507

பாசுரம்
செம்மொழிவாய் நால்வேத வாணர் வாழும்
திருநறையூர் மணிமாடச் செங்கண்மாலை
பொய்ம் மொழியொன் றில்லாத மெய்ம்மை யாளன்
புலமங்கைக் குலவேந்தன் புலமையார்ந்த
அம்மொழிவாய்க் கலிகன்றி யின்பப் பாடல்
பாடுவார் வியனுலகில் நமனார்பாடி
வெம்மொழிகேட் டஞ்சாதே மெய்ம்மை சொல்லில்
விண்ணவர்க்கு விருந்தாகும் பெருந்தக்கோரே (6.6.10)

பெரிய திருமொழி.561

பாசுர எண்: 1508

பாசுரம்
ஆளும் பணியு மடியேனைக்
கொண்டான் விண்ட நிசாசரரை
தோளும் தலையும் துணிவெய்தச்
சுடுவெஞ் சிலைவாய்ச் சரந்துரந்தான்
வேளும் சேயு மனையாரும்
வேற்க ணாரும் பயில்வீதி
நாளும் விழவி னொலியோவா
நறையூர் நின்ற நம்பியே (6.7.1)

பெரிய திருமொழி.562

பாசுர எண்: 1509

பாசுரம்
முனியாய் வந்து மூவெழுகால்
முடிசேர் மன்ன ருடல்துணிய
தனிவாய் மழுவின் படையாண்ட
தாரார் தோளான், வார்புறவில்
பனிசேர் முல்லை பல்லரும்பப்
பான லொருபால் கண்காட்ட
நனிசேர் கமலம் முகங்காட்டும்
நறையூர் நின்ற நம்பியே (6.7.2)

பெரிய திருமொழி.563

பாசுர எண்: 1510

பாசுரம்
தெள்ளார் கடல்வாய் விடவாய
சினவா ளரவில் துயிலமர்ந்து
துள்ளா வருமான் விழவாளி
துரந்தா னிரந்தான் மாவலிமண்
புள்ளார் புறவில் பூங்காவி
புலங்கொள் மாதர் கண்காட்ட
நள்ளார் கமலம் முகங்காட்டும்
நறையூர் நின்ற நம்பியே (6.7.3)

Enter a number between 1 and 4000.