பெரிய திருமொழி.544
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1491
பாசுரம்
உறியார் வெண்ணெ யுண்டு உர
லோடும் கட்டுண்டு,
வெறியார் கூந்தல் பின்னை
பொருட்டுஆன் வென்றானூர்,
பொறியார் மஞ்ஞை பூம்பொழில்
தோறும் நடமாட,
நறுநாண் மலர்மேல் வண்டிசை
பாடும் நறையூரே (6.5.4)
பெரிய திருமொழி.545
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1492
பாசுரம்
விடையேழ் வென்று மென்தோ
ளாய்ச்சிக் கன்பனாய்,
நடையால் நின்ற மருதம்
சாய்த்த நாதனூர்,
பெடையோ டன்னம் பெய்வளை
யார்தம் பின்சென்று
நடையோ டியலி நாணி
யொளிக்கும் நறையூரே (6.5.5)
பெரிய திருமொழி.546
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1493
பாசுரம்
பகுவாய் வன்பேய் கொங்கை
சுவைத்தா ருயிருண்டு,
புகுவாய் நின்ற போதகம்
வீழப் பொருதானூர்,
நெகுவாய் நெய்தல் பூமது
மாந்திக் கமலத்தின்
நகுவாய் மலர்மே லன்ன
முறங்கும் நறையூரே (6.5.6)
பெரிய திருமொழி.547
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1494
பாசுரம்
முந்து நூலும் முப்புரி
நூலும் முன்னீந்த,
அந்த ணாளன் பிள்ளையை
அந்நான்றளித்தானூர்,
பொந்தில் வாழும் பிள்ளைக்
காகிப் புள்ளோடி,
நந்து வாரும் பைம்புனல்
வாவி நறையூரே (6.5.7)
பெரிய திருமொழி.548
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1495
பாசுரம்
வெள்ளைப் புரவைத் தேர்விச
யற்காய் விறல்வியூகம்
விள்ள, சிந்துக் கோன்விழ
வூர்ந்த விமலனூர்,
கொள்ளைக் கொழுமீ னுண்குரு
கோடிப் பெடையோடும்,
நள்ளக் கமலத் தேற
லுகுக்கும் நறையூரே (6.5.8)
பெரிய திருமொழி.549
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1496
பாசுரம்
பாரை யூரும் பாரந்
தீரப் பார்த்தன்தன்
தேரை யூரும் தேவ
தேவன் சேருமூர்,
தாரை யூரும் தண்தளிர்
வேலிபுடைசூழ,
நாரை யூரும் நல்வயல்
சூழ்ந்த நறையூரே (6.5.9)
பெரிய திருமொழி.550
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1497
பாசுரம்
தாமத் துளப நீண்முடி
மாயன் தான்நின்ற
நாமத் திரள்மா மாளிகை
சூழ்ந்த நறையூர்மேல்,
காமக் கதிர்வேல் வல்லான்
கலிய னொலிமாலை,
சேமத் துணையாம் செப்பு
மவர்க்குத் திருமாலே (6.5.10)
பெரிய திருமொழி.551
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1498
பாசுரம்
அம்பரமும் பெருநிலனும் திசைக ளெட்டும்
அலைகடலும் குலவரையும் உண்டகண்டன்,
கொம்பமரும் வடமரத்தி னிலைமேல் பள்ளி
கூடினான் திருவடியே கூடிகிற்பீர்,
வம்பவிழும் செண்பகத்தின் வாச முண்டு
மணிவண்டு வகுளத்தின் மலர்மேல்வைகு,
செம்பியன்கோச் செங்கணான் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.1)
பெரிய திருமொழி.552
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1499
பாசுரம்
கொழுங்கயலாய் நெடுவெள்ளங் கொண்ட காலம்
குலவரையின் மீதோடி யண்டத்தப்பால்,
எழுந்தினிது விளையாடு மீச னெந்தை
இணையடிக்கீ ழினிதிருப்பீர் இனவண்டாலும்
உழும்செறுவில் மணிகொணர்ந்து கரைமேல் சிந்தி
உலகெல்லாம் சந்தனமு மகிலுங்கொள்ள,
செழும்பொன்னி வளங்கொடுக்கும் சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.2)
பெரிய திருமொழி.553
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1500
பாசுரம்
பவ்வநீ ருடையாடை யாகச் சுற்றிப்
பாரகலம் திருவடியாப் பவனம்மெய்யா
செவ்விமா திரமெட்டும் தோளா அண்டம்
திருமுடியா நின்றான்பால் செல்லகிற்பீர்
கவ்வைமா களிறுந்தி வெண்ணி யேற்றக்
கழல்மன்னர் மணிமுடிமேல் காகமேற
தெய்வவாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.3)