பெரிய திருமொழி.514
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1461
பாசுரம்
பிறிந்தேன் பெற்றமக் கள்பெண்டி
ரென்றிவர் பின்னுதவா
தறிந்தேன் நீபணித் தவரு
ளென்னுமொள் வாளுருவி
எறிந்தேன் ஐம்புலன் கள்இடர்
தீர வெறிந்துவந்து
செறிந்தேன் நின்னடிக் கேதிரு
விண்ணகர் மேயவனே (6.2.4)
பெரிய திருமொழி.515
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1462
பாசுரம்
பாண்டேன் வண்டறை யும்குழ
லார்கள்பல் லாண்டிசைப்ப,
ஆண்டார் வையமெல் லாம் அர
சாகி, முன்னாண்டவரே
மாண்டா ரென்றுவந் தார்அந்
தோமனை வாழ்க்கைதன்னை
வேண்டேன், நின்னடைந் தேன்திரு
விண்ணகர் மேயவனே (6.2.5)
பெரிய திருமொழி.516
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1463
பாசுரம்
கல்லா வைம்புலன் களவை
கண்டவா செய்யகில்லேன்,
மல்லா, மல்லம ருள்மல்
லர்மாள மல்லடர்த்த
மல்லா, மல்லலம் சீர்மதிள்
நீரிலங் கையழித்த
வில்லா, நின்னடைந் தேன்திரு
விண்ணகர் மேயவனே (6.2.6)
பெரிய திருமொழி.517
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1464
பாசுரம்
வேறா யானிரந் தேன்வெகு
ளாது மனக்கொளந்தாய்,
ஆறா வெந்நர கத்தடி
யேனை யிடக்கருதி,
கூறா ஐவர்வந் துகுமைக்
கக்குடி விட்டவரை,
தேறா துன்னடைந் தேன்திரு
விண்ணகர் மேயவனே (6.2.7)
பெரிய திருமொழி.518
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1465
பாசுரம்
தீவாய் வல்வினை யாருட
னின்று சிறந்தவர்போல்,
மேவா வெந்நர கத்திட
உற்று விரைந்துவந்தார்,
மூவா வானவர் தம்முதல்
வா மதி கோள்விடுத்த
தேவா, நின்னடைந் தேன்திரு
விண்ணகர் மேயவனே (6.2.8)
பெரிய திருமொழி.519
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1466
பாசுரம்
போதார் தாமரை யாள்புல
விக்குல வானவர்தம்
கோதா, கோதில்செங் கோல்குடை
மன்ன ரிடைநடந்த
தூதா, தூமொழி யாய்.சுடர்
போலென் மனத்திருந்த
வேதா, நின்னடைந் தேன்திரு
விண்ணகர் மேயவனே (6.2.9)
பெரிய திருமொழி.520
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1467
பாசுரம்
தேனார் பூம்புற வில்திரு
விண்ணகர் மேயவனை,
வானா ரும்மதில் சூழ்வயல்
மங்கையர் கோன், மருவார்
ஊனார் வேல்கலி யனொலி
செய்தமிழ் மாலைவல்லார்,
கோனாய் வானவர் தம்கொடி
மாநகர் கூடுவரே (6.2.10)
பெரிய திருமொழி.521
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1468
பாசுரம்
துறப்பேன் அல்லேனின் பம்துற
வாது, நின்னுருவம்
மறப்பே னல்லேனென் றும்மற
வாது, யானுலகில்
பிறப்பே னாகவெண் ணேன்பிற
வாமை பெற்றது, நின்
திறத்தே னாதன் மையால்
திருவிண் ணகரானே (6.3.1)
பெரிய திருமொழி.522
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1469
பாசுரம்
துறந்தே னார்வச் செற்றச்சுற்
றம்து றந்தமையால்,
சிறந்தேன் நின்னடிக்கே
யடிமை திருமாலே,
அறந்தா னாய்த்திரி வாய் உன்
னையென் மனத்தகத்தே,
திறம்பா மல்கொண் டேன்திரு
விண்ணகரானே (6.3.2)
பெரிய திருமொழி.523
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1470
பாசுரம்
மானேய் நோக்குநல்லார்
மதிபோல்முகத்துலவும்,
ஊனேய் கண்வாளிக் குடைந்தோட்
டந்துன் னடைந்தேன்,
கோனே குறுங்குடியுள்
குழகா திருநறையூர்த்
தேனே, வருபுனல்சூழ்
திருவிண் ணகரானே (6.3.3)