பெரிய திருமொழி.454
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1401
பாசுரம்
வளர்ந்தவனைத் தடங்கடலுள்
வலியுருவில் திரிசகடம்,
தளர்ந்துதிர வுதைத்தவனைத்
தரியாதன் றிரணியனைப்
பிளந்தவனை, பெருநிலமீ
ரடிநீட்டிப் பண்டொருநாள்
அளந்தவனை, யான்கண்ட
தணிநீர்த்தென் னரங்கத்தே (5.6.4)
பெரிய திருமொழி.455
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1402
பாசுரம்
நீரழலாய் நெடுநிலனாய்
நின்றானை, அன்றரக்கன்
ஊரழலா லுண்டானைக்
கண்டார்பின் காணாமே,
பேரழலாய்ப் பெருவிசும்பாய்ப்
பின்மறையோர் மந்திரத்தின்,
ஆரழலா லுண்டானைக்
கண்டதுதென் னரங்கத்தே (5.6.5)
பெரிய திருமொழி.456
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1403
பாசுரம்
தஞ்சினத்தைத் தவிர்த்தடைந்தார்
தவநெறியை, தரியாது
கஞ்சனைக்கொன் றன்றுலக
முண்டுமிழ்ந்த கற்பகத்தை,
வெஞ்சினத்த கொடுந்தொழிலோன்
விசையுருவை யசைவித்த,
அஞ்சிறைப்புட் பாகனையான்
கண்டதுதென் னரங்கத்தே (5.6.6)
பெரிய திருமொழி.457
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1404
பாசுரம்
சிந்தனையைத் தவநெறியைத்
திருமாலை, பிரியாது
வந்தெனது மனத்திருந்த
வடமலையை, வரிவண்டார்
கொந்தணைந்த பொழில்கோவ
லுலகளப்பா னடிநிமிர்த்த
அந்தணனை, யான்கண்ட
தணிநீர்த்தென் னரங்கத்தே (5.6.7)
பெரிய திருமொழி.458
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1405
பாசுரம்
துவரித்த வுடையார்க்கும்
தூய்மையில்லச் சமணர்க்கும்,
அவர்கட்கங் கருளில்லா
அருளானை, தன்னடைந்த
எமர்கட்கு மடியேற்கு
மெம்மாற்கு மெம்மனைக்கும்,
அமரர்க்கும் பிரானாரைக்
கண்டதுதென் னரங்கத்தே (5.6.8)
பெரிய திருமொழி.459
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1406
பாசுரம்
பொய்வண்ணம் மனத்தகற்றிப்
புலனைந்தும் செலவைத்து,
மெய்வண்ணம் நினைந்தவர்க்கு
மெய்ந்நின்ற வித்தகனை,
மைவண்ணம் கருமுகில்போல்
திகழ்வண்ண மரதகத்தின்,
அவ்வண்ண வண்ணனையான்
கண்டதுதென் னரங்கத்தே (5.6 .9)
பெரிய திருமொழி.460
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1407
பாசுரம்
ஆமருவி நிரைமேய்த்த
அணியரங்கத் தம்மானை,
காமருசீர்க் கலிகன்றி
யொலிசெய்த மலிபுகழ்சேர்
நாமருவு தமிழ்மாலை
நாலிரண்டோ டிரண்டினையும்,
நாமருவி வல்லார்மேல்
சாராதீ வினைதாமே (5.6.10)
பெரிய திருமொழி.461
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1408
பாசுரம்
பண்டைநான் மறையும் வேள்வியும் கேள்விப்
பதங்களும் பதங்களின் பொருளும்,
பிண்டமாய் விரித்த பிறங்கொளி யனலும்
பெருகிய புனலொடு நிலனும்,
கொடல்மா ருதமும் குரைகட லேழும்
ஏழுமா மலைகளும் விசும்பும்,
அண்டமும் தானாய் நின்றவெம் பெருமான்
அரங்கமா நகரமர்ந் தானே (5.7.1)
பெரிய திருமொழி.462
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1409
பாசுரம்
இந்திரன் பிரம னீசனென் றிவர்கள்
எண்ணில்பல் குணங்களே யியற்ற,
தந்தையும் தாயும் மக்களும் மிக்க
சுற்றமும் சுற்றிநின் றகலாப்
பந்தமும், பந்த மறுப்பதோர் மருந்தும்
பான்மையும் பல்லுயிர்க் கெல்லாம்,
அந்தமும் வாழ்வு மாயவெம் பெருமான்
அரங்கமா நகரமர்ந் தானே (5.7.2)
பெரிய திருமொழி.463
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1410
பாசுரம்
மன்னுமா நிலனும் மலைகளும் கடலும்
வானமும் தானவ ருலகும்,
துன்னுமா யிருளாய்த் துலங்கொளி சுருங்கித்
தொல்லைநான் மறைகளும் மறைய,
பின்னும்வா னவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப்
பிறங்கிருள் நிறங்கெட, ஒருநாள்
அன்னமாய் அன்றங் கருமறை பயந்தான்
அரங்கமா நகரமர்ந் தானே (5.7.3)