பெரிய திருமொழி.424
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1371
பாசுரம்
வாம்ப ரியுக மன்னர்த முயிர்செக
ஐவர்க்கட் கரசளித்த,
காம்பி னார்த்திரு வேங்கடப் பொருப்ப.நின்
காதலை யருளெனக்கு,
மாம்பொ ழில்தளிர் கோதிய மடக்குயில்
வாயது துவர்ப்பெய்த,
தீம்ப லங்கனித் தேனது _கர்திரு
வெள்ளறை நின்றானே (5.3.4)
பெரிய திருமொழி.425
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1372
பாசுரம்
மான வேலொண்கண் மடவரல் மண்மகள்
அழுங்கமுந் நீர்ப்பரப்பில்,
ஏன மாகியன் றிருநில மிடந்தவ னே
எனக் கருள்புரியே,
கான மாமுல்லை கழைக்கரும் பேறிவெண்
முறுவல்செய் தலர்கின்ற,
தேனின் வாய்மலர் முருகுகுக் கும்திரு
வெள்ளறை நின்றானே (5.3.5)
பெரிய திருமொழி.426
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1373
பாசுரம்
பொங்கு நீண்fமுடி யமரர்கள் தொழுதெழ
அமுதினைக் கொடுத்தளிப்பான்,
அங்கொ ராமைய தாகிய வாதி.நின்
னடிமையை யருளெனக்கு,
தங்கு பேடையொ டூடிய மதுகரம்
தையலார் குழலணைவான்,
திங்கள் தோய்சென்னி மாடம்சென் றணை
திரு வெள்ளறை நின்றானே (5.3.6)
பெரிய திருமொழி.427
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1374
பாசுரம்
ஆறி னோடொரு நான்குடை நெடுமுடி
அரக்கன்றன் சிரமெல்லாம்,
வேறு வேறுக வில்லது வளைத்தவ னே
எனக் கருள்புரியே,
மாறில் சோதிய மரதகப் பாசடைத்
தாமரை மலர்வார்ந்த,
தேறல் மாந்திவண் டின்னிசை முரல
திரு வெள்ளறை நின்றானே (5.3.7)
பெரிய திருமொழி.428
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1375
பாசுரம்
முன்னிவ் வேழுல குணர்வின்றி யிருள்மிக
உம்பர்கள் தொழுதேத்த,
அன்ன மாகியன் றருமறை பயந்தவ
னே.எனக் கருள்புரியே,
மன்னு கேதகை சூதக மென்றிவை
வனத்திடைச் சுரும்பினங்கள்,
தென்ன வென்னவண் டின்னிசை முரல்திரு
வெள்ளறை நின்றானே (5.3.8)
பெரிய திருமொழி.429
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1376
பாசுரம்
ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென்
றகலிட முழுதினையும்,
பாங்கி னாற்கொண்ட பரம.நிற் பணிந்தெழு
வேனெனக் கருள்புரியே,
ஓங்கு பிண்டியின் செம்மல ரேறிவண்
டுழிதர, மாவேறித்
தீங்கு யில்மிழற் றும்படப் பைத்திரு
வெள்ளறை நின்றானே (5.3.9)
பெரிய திருமொழி.430
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1377
பாசுரம்
மஞ்சு லாமணி மாடங்கள் சூழ்திரு
வெள்ளறை யதன்மேய,
அஞ்ச னம்புரை யும்திரு வுருவனை
ஆதியை யமுதத்தை,
நஞ்சு லாவிய வேல்வல வன்கலி
கன்றிசொல் ஐயிரண்டும்,
எஞ்ச லின்றிநின் றேத்தவல் லாரிமை
யோர்க்ர சாவார்க்களே (5.3.10)
பெரிய திருமொழி.431
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1378
பாசுரம்
உந்தி மேல்நான் முகனைப்
படைத்தான் உல குண்டவன்
எந்தை பெம்மான், இமையோர்கள்
தாதைக்கிட மென்பரால்,
சந்தி னோடு மணியும்
கொழிக்கும்புனல்f காவிரி,
அந்தி போலும் நிறத்தார்
வயல்சூழ்தென் னரங்கமே (5.4.1)
பெரிய திருமொழி.432
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1379
பாசுரம்
வையமுண் டாலிலை மேவு
மாயன்மணி நீண்முடி,
பைகொள் நாகத் தணையான்
பயிலுமிட மென்பரால்,
தையல் நல்லார் குழல்மா
லையும்மற்றவர் தடமுலை,
செய்ய சாந்தும் கலந்திழி
புனல்சூழ்தென் னரங்கமே (5.4.2)
பெரிய திருமொழி.433
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1380
பாசுரம்
பண்டிவ் வைய மளப்பான்
சென்றுமாவலி கையில்நீர்
கொண்ட ஆழித் தடக்கைக்
குறளனிட மென்பரால்,
வண்டு பாடும் மதுவார்
புனல்வந்திழி காவிரி
அண்ட நாறும் பொழில்சூழ்ந்து
அழகார்தென் னரங்கமே (5.4.3)