பெரிய திருமொழி.404
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1351
பாசுரம்
வெற்பால் மாரி பழுதாக்கி
விறல்வா ளரக்கர் தலைவன்றன்,
வற்பார் திரள்தோ ளைந்நான்கும்
துணித்த வல்வில் இராமனிடம்,
கற்பார் புரிசை செய்குன்றம்
கவினார் கூடம் மாளிகைகள்,
பொற்பார் மாட மெழிலாரும்
புள்ளம் பூதங் குடிதானே (5.1.4)
பெரிய திருமொழி.405
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1352
பாசுரம்
மையார் தடங்கண் கருங்கூந்தல்
ஆய்ச்சி மறைய வைத்ததயிர்,
நெய்யார் பாலோ டமுதுசெய்த
நேமி யங்கை மாயனிடம்,
செய்யார் ஆரல் இரைகருதிச்
செங்கால் நாரை சென்றணையும்,
பொய்யா நாவில் மறையாளர்
புள்ளம் பூதங் குடிதானே (5.1.5)
பெரிய திருமொழி.406
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1353
பாசுரம்
மின்னி னன்ன நுண்மருங்குல்
வேயேய் தடந்தோள் மெல்லியற்கா,
மன்னு சினத்த மழவிடைகள்
ஏழன் றடர்த்த மாலதிடம்,
மன்னு முதுநீ ரரவிந்த
மலர்மேல் வரிவண் டிசைபாட,
புன்னை பொன்னேய் தாதுதிர்க்கும்
புள்ளம் பூதங் குடிதானே (5.1.6)
பெரிய திருமொழி.407
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1354
பாசுரம்
குடையா விலங்கல் கொண்டேந்தி
மாரி பழுதா நிரைகாத்து,
சடையா னோட அடல்வாணன்
தடந்தோள் துணித்த தலைவனிடம்,
குடியா வண்டு கள்ளுண்ணக்
கோல நீலம் மட்டுகுக்கும்,
புடையார் கழனி யெழிலாரும்
புள்ளம் பூதங் குடிதானே (5.1.7)
பெரிய திருமொழி.408
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1355
பாசுரம்
கறையார் நெடுவேல் மறமன்னர்
வீய விசயன் தேர்கடவி,
இறையான் கையில் நிறையாத
முண்டம் நிறைத்த வெந்தையிடம்,
மறையால் மூத்தீ யவைவளர்க்கும்
மன்னு புகழால் வண்மையால்,
பொறையால் மிக்க அந்தணர்வாழ்
புள்ளம் பூதங் குடிதானே (5.1.8)
பெரிய திருமொழி.409
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1356
பாசுரம்
துன்னி மண்ணும் விண்ணாடும்
தோன்றா திருளாய் மூடியநாள்,
அன்ன மாகி யருமறைகள்
அருளிச் செய்த அமலனிடம்,
மின்னு சோதி நவமணியும்
வேயின் முத்தும் சாமரையும்,
பொன்னும் பொன்னி கொணர்ந்தலைக்கும்
புள்ளம் பூதங் குடிதானே (5.1.9)
பெரிய திருமொழி.410
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1357
பாசுரம்
கற்றா மறித்து காளியன்றன்
சென்னி நடுங்க நடம்பயின்ற
பொற்றாமரையாள் தன்கேள்வன்
புள்ளம் பூதங்குடிதன்மேல்
கற்றார் பரவும் மங்கையர்க்கோன்
காரார் புயற்கைக் கலிகன்றி,
சொல்தானீரைந் திவைபாடச்
சோர நில்லா துயர்தாமே (5.1.10)
பெரிய திருமொழி.411
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1358
பாசுரம்
தாம்தம் பெருமை யறியார், தூது
வேந்தர்க் காய வேந்த ரூர்போல்,
காந்தள் விரல்மென் கலைநன் மடவார்,
கூந்தல் கமழும் கூட லூரே (5.2.1)
பெரிய திருமொழி.412
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1359
பாசுரம்
செறும்திண் திமிலே றுடைய, பின்னை
பெறும்தண் கோலம் பெற்றா ரூர்ப்போல்,
நறுந்தண் தீம் fதே னுண்ட வண்டு,
குறிஞ்சி பாடும் கூட லூரே (5.2.2)
பெரிய திருமொழி.413
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1360
பாசுரம்
பிள்ளை யுருவாய்த் தயிருண்டு, அடியேன்
உள்ளம் புகுந்த வொருவ ரூர்போல்,
கள்ள நாரை வயலுள், கயல்மீன்
கொள்ளை கொள்ளும் கூட லூரே (5.2.3)